மின்சாரம் தாக்கி அங்கன்வாடி ஊழியர் சாவு


மின்சாரம் தாக்கி அங்கன்வாடி ஊழியர் சாவு
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி அருகே மின்சாரம் தாக்கி அங்கன்வாடி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராணி (வயது 43). இவர் இந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகி கடந்த 15 ஆண்டுகளாக கணவனை பிரிந்த நிலையில் இவரது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு இவர் மின்விசிறியை போடும்போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தொண்டி போலீசார், ஜெயராணியின் உடலை கைப்பற்றி திருவாடானைஅரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ேபாலீசார் விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story