வீட்டை தன் பெயருக்கு எழுதி தர மறுத்ததால் ஆத்திரம்: தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபர்


வீட்டை தன் பெயருக்கு எழுதி தர மறுத்ததால் ஆத்திரம்:  தந்தையை அரிவாளால் வெட்டிய வாலிபர்
x

வீட்டை தன் பெயருக்கு எழுதி தராத ஆத்திரத்தில் தந்தையை வாலிபர் அரிவாளால் வெட்டனார்

தேனி

கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மகன் முகேஷ்கண்ணன் (25).

ஈஸ்வரனுக்கு குள்ளப்பகவுண்டன்பட்டியில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்தநிலையில் அந்த வீட்டை முகேஷ்கண்ணன் தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு ஈஸ்வரனிடம் கேட்டு தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த முகேஷ்கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஈஸ்வரனை சரமாரியாக வெட்டினார்.

இதையடுத்து படுகாயமடைந்த ஈஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து. அவர் கொடுத்த புகாரின்பேரில் கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story