அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம்


அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:46 PM GMT)

புத்தகரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. .கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கீதா பூமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன், உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாயக்கூடம், படித்துறை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனர்.இதில் வேளாண்மை உதவி அலுவலர் பவித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரியப்பன், சுபைதா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறைகள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.முடிவில் ஊராட்சி செயலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.


Next Story