சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகள் அறிவிப்பு


சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகள் அறிவிப்பு
x

தமிழக அரசு 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

"2023-2024-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான "நம்மாழ்வார் விருதுடன்" பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாயிகள் விவரம் பின்வருமாறு:-

கோ.சித்தர், மகர்நோன்புச்சாவடி, தஞ்சாவூர் மாவட்டம் அவர்களுக்கு முதல்பரிசாக ரூ.2.50 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம், கே.வெ.பழனிச்சாமி, பொங்கலூர், திருப்பூர் மாவட்டம் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.1.50 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் மற்றும் கு. எழிலன், அச்சுக்கட்டுகிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.1.00 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story