சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு


சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு
x

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகு தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதற்கு மாறாக இரவில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இரவு 9 மணிக்கெல்லாம் பனி விழ தொடங்குகிறது. இந்த பனிப்பொழிவின் தாக்கம் காலை 8 மணி வரை நீடிக்கிறது.

இந்த பனிமூட்டத்தினால் சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே சென்றனர். பனி மூட்டத்தால் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் பகல் 12.30 மணிக்கு விமானம் புறப்படும் என சென்னை விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.


Next Story