நாளையும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு


நாளையும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவிப்பு
x

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் பல இடங்களில் வழக்கமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் அரசு உடனடியாக அழைத்து பேச வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story