ஆவடி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு


ஆவடி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x

ஆவடி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

ஆவடியை அடுத்த கோவில்பதாகை கலைஞர் நகரை சேர்ந்தவர் ரோஜா (வயது 64). கடந்த 19-ந் தேதி இவரது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரோஜா, அவருடைய மகன் சங்கர்ராஜ் (41), பேத்தி கீர்த்திகா (11) மற்றும் பேரன் கவுதம் (10) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 4 பேரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 20-ந் தேதி ரோஜாவும், நேற்று முன்தினம் காலை கீர்த்திகாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்தநிலையில் நேற்று காலை சங்கர்ராஜிம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. கவுதம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.

சிலிண்டர் வெடித்த விபத்தில் தாய், மகன், பேத்தி ஆகிய 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story