சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி


சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலி
x

சரக்கு வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒரு வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை

திருமயம் மேலப்பனையூர் அருகே புரகரப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் வீரக்குமார் (வயது 22). இவரும், பூவக்கோன்பட்டியை சேர்ந்த மெய்யர் மகன் கார்த்திக் (27) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கூடலூர்-புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ெநல் ஏற்றி வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் வீரக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story