விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு வாலிபர் சாவு


விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு வாலிபர் சாவு
x
தினத்தந்தி 27 Aug 2023 12:30 AM IST (Updated: 27 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒரு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கழுகுமலை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 20). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் அருகே கடந்த 20-ந் தேதி இரவு சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் ெகாண்டன. இதில் ராஜேஷ் பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுகுசபர் (26) காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுகுசபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story