தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்


தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க  விண்ணப்பிக்கலாம்
x

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

விழுப்புரம், செப்.15-

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 2008-ம் ஆண்டு வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோருபவர்கள் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களைள வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் படிவம்- ஏ.இ.-5-ல் பூர்த்தி செய்த விண்ணப்பம், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரைபடங்கள், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் எனில் இடத்தின் கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், உரிம கட்டணம் ரூ.600-யை உரிய அரசு கணக்கில் இ-செலான் மூலமாக செலுத்தி அதற்கான அசல் செலுத்துச்சீட்டு, மனுதாரரின் முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம்-2 ஆகியவற்றுடன் சேவை கட்டணமாக ரூ.500 செலுத்தி பொது இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்களை அரசு உத்தரவின்படி வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் பொது இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 30-ந் தேதிக்குள் தற்காலிக பட்டாசு கடை உரிமம் கோரி பொது இ-சேவை மையங்கள் மூலம் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படுமென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story