கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சமுதாயத்தில் துணிச்சலான தைரியமிக்க சாதனை புரிந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் கல்பனா சாவ்லா விருது வழங்கபட்டு வருகிறது. இந்த ஆண்டு (2022) கல்பனா சாவ்லா விருது பெற விரும்பும் பெண்களிடம் இருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம். மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story