மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தொடங்க விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என்பதால், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் அமைத்திட விருப்பமுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பத்தினை ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பி-பிரிவு தரை தளம், தொலைபேசி எண் 04172-274177 என்ற முகவரியில் வருகிற 26-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






