ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா


ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா
x

ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

மதுரை, தேனி, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் டி.கல்லுப்பட்டியில் நடைபெற்றது. இதில் 50 ஊராட்சி தலவைர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறந்த ஊராட்சி தலைவராக கொங்கன்குளம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பாராட்டு விழா கொங்கன் குளம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல ஊராட்சி தலைவர்கள் பயிற்சி முகாம் முதல்வர் மல்லிகா, பயிற்சியாளர் தயாளன் ஆகியோர் சிறந்த தலைவருக்கான கேடயத்தை வழங்கினர். கொங்கன்குளம் ஊராட்சி செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். கொங்கன்குளம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்தினார். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் சாந்தி, தனலட்சுமி, மக்கள் நல பணியாளர் மாரிமுத்து, மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பொறுப்பாளர் கவுரி, மண்புழு தயாரிக்கும் தொழில்கூட பொறுப்பாளர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story