கோவில்பட்டியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா


கோவில்பட்டியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு  பாராட்டு விழா
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் அங்கன்வாடி மையங்களில் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி அளித்தலில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு விழா ஜே.சி.ஐ. சார்பில் நடந்தது.

விழாவுக்கு கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசா பேகம் தலைமை தாங்கினார்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி ஜே.சி.ஐ. செயலாளர் சூர்யா வரவேற்று பேசினார். கோவில்பட்டி, கயத்தாறு வட்டாரங்களில் சிறப்பாக பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை ௳ழங்கி கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் தீபன்ராஜ் பாராட்டி பேசினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் முத்துமாரி நன்றி கூறினார்.


Next Story