வெள்ளி குதிரை வாகனத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் வீதி உலா


வெள்ளி குதிரை வாகனத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் வீதி உலா
x

வெள்ளி குதிரை வாகனத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் வீதி உலா வந்தார்.

புதுக்கோட்டை

திருவரங்குளம், மே.31-

திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்மன் சமேத அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அரங்குளநாதர்- பெரியநாயகி அம்மனுக்கு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சுவாமி-அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.


Next Story