வெள்ளி குதிரை வாகனத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் வீதி உலா



வெள்ளி குதிரை வாகனத்தில் அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் வீதி உலா வந்தார்.
திருவரங்குளம், மே.31-
திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்மன் சமேத அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. 6-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு அரங்குளநாதர்- பெரியநாயகி அம்மனுக்கு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சுவாமி-அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரங்குளநாதர்-பெரியநாயகி அம்மன் இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire