முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக பா.ஜ.க. பிரமுகர் கைது

திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருப்பவர் ரைட்டர் வினித்குமார் (வயது 24). தாராபுரத்தில் வசித்து வரும் இவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும், தமிழக காவல்துறையை பற்றியும் அவதூறாக கார்ட்டூன் படத்துடன் பதிவிட்டதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ரைட்டர் வினித்குமாரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பதிவிட்டதாக பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பா.ஜ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





