ஆரோக்கிய மாதா ஆலய ஆடம்பர தேர் பவனி
ஆரோக்கிய மாதா ஆலய ஆடம்பர தேர் பவனி நடந்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கீழமைக்கேல்பட்டி பங்குத்தந்தை அடைக்கல சாமி சிறப்பு திருப்பலி நடத்தினார். நேற்று மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆரோக்கிய மாதா ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. நடுவலூர் பங்குத்தந்தை ஜோசப் தன்ராஜ் ஆடம்பர தேரை மந்திரித்தார். கிறிஸ்தவர்கள் ஆரோக்கிய மாதாவிடம் பல்வேறு பிரார்த்தனைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர். பேண்டு வாத்தியம் முழங்க தா.பழூரின் முக்கிய வீதிகள் வழியாக ஆரோக்கிய மாதா ஆடம்பர தேர் பவனி நடைபெற்று, மீண்டும் ஆலயத்தை தேர் வந்தடைந்தது. மெழுகுவர்த்தி ஏந்தி பல்வேறு பக்தி பாடல்களை மேரி மாதா மற்றும் இயேசு கிறிஸ்துவை நோக்கி பாடியவாறு கிறிஸ்தவர்கள் ஆடம்பர தேருடன் ஊர்வலமாக வந்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி அளவில் பாடல் திருப்பலியோடு திருவிழா நிறைவடைகிறது.