நாமகிரிப்பேட்டை அருகேபெண்ணுக்கு பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் கைது

ராசிபுரம்:
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியா கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் அன்பரசு (வயது 50). முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொங்காலம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 37 வயது பெண்ணுக்கு அன்பரசு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் அன்பரசுவை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





