நாமகிரிப்பேட்டை அருகேபெண்ணுக்கு பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் கைது


நாமகிரிப்பேட்டை அருகேபெண்ணுக்கு பாலியல் தொல்லை; முன்னாள் ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2023 7:00 PM GMT (Updated: 2 Aug 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியா கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் அன்பரசு (வயது 50). முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொங்காலம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 37 வயது பெண்ணுக்கு அன்பரசு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் ராணுவ வீரர் அன்பரசுவை கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story