நல்லம்பள்ளி அருகேபணம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது


நல்லம்பள்ளி அருகேபணம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2023 7:00 PM GMT (Updated: 3 Aug 2023 7:01 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). டிராவல்ஸ் அதிபர். இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ரூ.10 லட்சம் கொடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய ரூ.13 லட்சம் தருவதாக கூறினர். இதை நம்பிய அவர் அந்த கும்பலிடம் ரூ.10 லட்சத்ைத கொடுத்தார். பின்னர் அவர்கள் கொடுத்த பெட்டியை பார்த்தபோது அவை அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பென்னாகரம் அருகே சீலநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி (35), கோபாலம்பட்டி நடூரை சேர்ந்த ராஜேந்திரன் (45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை மீட்கப்பட்டது. இதில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பென்னாகரம் கோடுப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (35), ஊத்தங்கரை நந்திபுதூர் கிராமத்தை சேர்ந்த ஹரிபாபு (38) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story