ஓசூரில்பியூட்டி பார்லரில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

ஓசூர்:
ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஆர்.சி. தேவாலயம் எதிரே உள்ள பியூட்டி பார்லரில் விபசாரம் நடப்பதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து பியூட்டி பார்லர் நடத்தி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 31 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





