தர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது

தர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி அருகே உள்ள அல்லியூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 47) என்பவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருந்த 35 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜூவை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





