மனைவியை தாக்கிய கணவர் கைது


மனைவியை தாக்கிய கணவர் கைது
x

சேலத்தில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி கேட் மூணாங்கரடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் வெள்ளி கொலுசு பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டு செலவுக்கு சரிவர பணம் தராமல் சரவணன் ஊர் சுற்றியதாக கூறி அவருடைய மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரவணன் ஆத்திரத்தில் லாவண்யாவின் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்த லாவண்யாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து சரவணனை நேற்று கைது செய்தார்.


Next Story