குட்கா விற்ற 5 பேர் கைது


குட்கா விற்ற 5 பேர் கைது
x

குட்கா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, ஓசூர், கெலமங்கலம் பகுதிகளில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்கப்படுகிறதா என போலீசார் சோதனையிட்டனர். இதில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்றதாக கிருஷ்ணகிரி, பாணாக்கார தெரு பாபு (வயது 56), ஓசூர் மூக்கண்டப்பள்ளி மாது (52), பேடரப்பள்ளி ஜானு என்கிற ஜானு மகாபத்ரா (38), கண்டகானப்பள்ளி நடராஜன் (32), கெலமங்கலம் வீரபத்திரன் (74) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ரூ.1,862 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story