விவசாயியை தாக்கியவர் கைது

விவசாயியை தாக்கியவர் கைது
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் ஜின்னா தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 37). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை கருக்கன்சாவடியில் உள்ள தனது மாந்தோப்பிற்கு சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த ஜம்பு என்கிற ஈஸ்வரன் (43) மது குடித்து கொண்டிருந்தார். இதை தட்டி கேட்ட அருணை மதுபோதையில் இருந்த ஈஸ்வரன் மரக்கட்டையால் தாக்கினார். இதில் காயமடைந்த அருண் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





