நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன், தம்பி கைது

நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய அண்ணன், தம்பி கைது
சூளகிரி:
ஓசூர் எழில் நகரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 40). விவசாயி. இவருடைய சகோதரர்கள் கோவிந்தராஜ் (55) மற்றும் முனியப்பன் (50). இவர்கள் சூளகிரி தாலுகா சென்னப்பள்ளி அருகே மேடுப்பள்ளிகாடு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களிடையே நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் திருப்பதி தாக்கப்பட்டார். இதுகுறித்து திருப்பதி சூளகிரி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் கோவிந்தராஜ், முனியப்பன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





