மங்களபுரம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு; 2 வாலிபர்கள் கைது


மங்களபுரம் அருகே  மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு; 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களபுரம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைப்பு; 2 வாலிபர்கள் கைது

நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம் நெடுஞ்சாலை ஒண்டிக்கடை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன் திறந்தவெளியில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்தனர்.

பின்னர் அப்பகுதி மக்கள் 2 பேரையும் பிடித்து மங்களபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றது ஒடுவன்குறிச்சியை சேர்ந்த சர்மா (வயது 26), அத்தனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் 2 பேரையும் கைது செய்தார்.

1 More update

Next Story