பாப்பாரப்பட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது


பாப்பாரப்பட்டி அருகே  இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை  கணவர் கைது
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:45 PM GMT)

பாப்பாரப்பட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் கைது

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாது. விவசாயி. இவருடைய மனைவி சசிகலா (வயது 20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சசிகலா பக்கத்து கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு அழைத்து செல்லுமாறு கணவர் மாதுவிடம் கேட்டதாக தெரிகிறது.

உதவி கலெக்டர் விசாரணை

ஆனால் அதற்கு மாது மறுத்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது மாது, மனைவி சசிகாலை தாக்கியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த சசிகலா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் உள்ள கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சசிகாலவின் தாய் செந்தாமரை போலீசில் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாது மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story