மூதாட்டியிடம் நகை பறித்த வடமாநில வாலிபர் கைது


மூதாட்டியிடம் நகை பறித்த வடமாநில வாலிபர் கைது
x

மூதாட்டியிடம் நகை பறித்த வடமாநில வாலிபர் கைது

நாமக்கல்

நாமக்கல் நகர் போதுப்பட்டியில் வசித்து வருபவர் வரதம்மாள் (வயது 77). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மே மாதம் 12-ந் தேதி மளிகை பொருட்களை வாங்கி கொண்டு போதுப்பட்டி கே.கே.பி.தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வரதம்மாள் அணிந்திருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் அருகே உள்ள நகர் பகுதியை சேர்ந்த அன்வர் மகன் சியா ஹைபர் அப்பாஸ் (22) என்பவர் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story