எருமப்பட்டியில் பணத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது


எருமப்பட்டியில்  பணத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 19 Dec 2022 6:45 PM GMT)
நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி அய்யர் மேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 44). மர வியாபாரி. இவர் எருமப்பட்டி சிவாஜி நகரில் வசிக்கும் துரைராஜ் மகன் மணிவண்ணன் என்பவரிடம் பணம் வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து மணிவண்ணன், எருமப்பட்டி பழனி நகர் பூசாரி தெருவை சேர்ந்த விஜயகுமார் (45) மற்றும் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் மதன்ராஜ் (20) ஆகியோர் சாமிநாதன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

பின்னர் இருதரப்பிலும் தனித்தனியே எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சாமிநாதன் மனைவி பவளக்கொடி கொடுத்த புகாரின்பேரில் மணிவண்ணன், விஜயகுமார், மதன்ராஜ் ஆகிய 3 பேர் மீதும், மணிவண்ணன் தரப்பில் கொடுத்த புகாரின்பேரில் சாமிநாதன், அய்யனார், வெங்கடாசலம், சந்தோஷ் குமார், பார்த்திபன் ஆகிய 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சாமிநாதன், வெங்கடாசலம், விஜயகுமார், மதன்ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.


Next Story