விசைத்தறி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது


விசைத்தறி தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் ஆவத்திபாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 36). விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆவத்திபாளையத்தை சேர்ந்த பகத்சிங் (28) என்பவர் செல்வத்திடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து செல்வன் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பகத்சிங்கை கைது செய்தனர்.


Next Story