நாமகிரிப்பேட்டை அருகேதொழிலாளியை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது


நாமகிரிப்பேட்டை அருகேதொழிலாளியை கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள மஞ்சள் குடோனில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய தம்பி நந்தகுமார் (19). அதே பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (24). இந்த நிலையில் அலெக்ஸ் பாண்டியன் குடிபோதையில் நந்தகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அண்ணன் அஜித்குமார், அலெக்ஸ் பாண்டியனிடம் சென்று தம்பியை தாக்கியது குறித்து தட்டி கேட்டாராம். அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அலெக்ஸ் பாண்டியன், அவருடைய தந்தை குப்புசாமி (45) மற்றும் குமரகுரு ஆகியோர் சேர்ந்து அஜித்குமாைர கம்பியால் தாக்கினார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தார். மேலும் தலமைறைவான குப்புசாமி, குமரகுரு ஆகியோரை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story