ஜேடர்பாளையம் அருகேசிறுமியிடம் காதலிக்க கோரி தொந்தரவு; வாலிபர் கைது

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மகன் சிவக்குமார் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் 17 சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நாமக்கல்லில் உள்ள மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்..
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





