மாரண்டஅள்ளி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது
தர்மபுரி
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி அருகே 5-வது மைல்கல் பகுதியில் நடுப்பையன் (வயது 63) என்பவர் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் முனுசாமிகொட்டாய் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ராஜேந்திரன் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story