குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது


குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
x

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா தாமரங்கோட்டை அருகே உள்ள உம்பளக்கொல்லை ஆவவேளாளர் தெருவை சேர்ந்தவர் பாலு என்ற பாலகிருஷ்ணன் (வயது 54). சாராய வியாபாரி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் பாலகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், குண்டர் சட்டத்தில் பாலகிருஷ்ணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.


Next Story