குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா தாமரங்கோட்டை அருகே உள்ள உம்பளக்கொல்லை ஆவவேளாளர் தெருவை சேர்ந்தவர் பாலு என்ற பாலகிருஷ்ணன் (வயது 54). சாராய வியாபாரி. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் பாலகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன், குண்டர் சட்டத்தில் பாலகிருஷ்ணனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





