வெண்ணந்தூர் அருகேசிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த 11 வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுமியிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் தாய் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வெள்ளையனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





