நிலத்தகராறில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது


நிலத்தகராறில் தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2023 7:00 PM GMT (Updated: 26 March 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் தாலுகா குருவிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பன் (வயது 33). கூலித்தொழிலாளி. இவரது சகோதரர் செல்வம் (43). இவர்களுக்குள் நிலத்தகராறு இருந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் முத்தப்பன் தாக்கப்பட்டார். இதுகுறித்து முத்தப்பன் கொடுத்த புகாரின்பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம் (43), மீனாட்சி (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அதே போல அமாவாசை என்பவர் ஒரு புகார் கொடுத்தார். இதில் தானும், செல்வமும் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் முத்தப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story