ஓசூர் அருகேஜல்லி, மணல் கடத்திய 2 பேர் கைது


ஓசூர் அருகேஜல்லி, மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 April 2023 7:00 PM GMT (Updated: 9 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

மத்திகிரி:

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுங்க துறையின் துணை இயக்குனரும், சிறப்பு பறக்கும் படை அதிகாரியுமான விஜயலட்சுமி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் மத்திகிரி அருகே பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற 2 டிப்பர் லாரிகளை சோதனை செய்தபோது அதில் 6 யூனிட் எம்.சாண்ட் மணல், 4 யூனிட் ஜல்லி ஆகியவை அனுமதியின்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து மணலை எடுத்து சென்றதாக பீகார் மாநிலத்தை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் சோனல் சாகினி (வயது 41), கர்நாடகாவை சேர்ந்த பசலிங்கப்பா (32) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள்,எம்.சாண்ட் மணல் மற்றும் ஜல்லிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story