இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2023 7:00 PM GMT (Updated: 12 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டியை சேர்ந்தவர் சென்னப்பன் (37). கூலித்தொழிலாளி. கரடிக்கல்லை சேர்ந்தவர் நடராஜ் (54). உறவினர்கள். இவர்களுக்குள் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில், சென்னப்பன் தாக்கப்பட்டார். இதுகுறித்து சென்னப்பன் கொடுத்த புகாரின்பேரில் நடராஜை போலீசார் கைது செய்தனர். அதேபோல் நடராஜ் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அந்த புகாரின்பேரில் போலீசார் சென்னப்பன் (37), நாகராஜ் (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story