இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது


இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 April 2023 7:00 PM GMT (Updated: 20 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே உள்ள பெரியாகவுண்டனூரை சேர்ந்தவர் பெருமா (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 52). உறவினர்கள். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பெருமா வளர்த்த கோழி எல்லப்பன் நிலத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து பெருமா கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் சின்னபாப்பா (45) என்பவரை கைது செய்தனர். அதேபோல் எல்லப்பன் கொடுத்த புகாரின்பேரில் பெரியசாமி (33), தேசய்யா (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story