வேப்பனப்பள்ளி அருகேமது போதையில் நண்பரை தாக்கியவர் கைது

வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமானப்பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (32). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 26-ந் தேதி அந்த பகுதியில் உள்ள கோவில் அருகில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகோபால் கல்லால் ஸ்ரீகாந்தை தாக்கினார். இதில் காயம் அடைந்த ஸ்ரீகாந்த் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





