கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது


கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது
x

கஞ்சா சாக்லேட் விற்றவரை கைது செய்தனர்.

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் தலை மையில் போலீசார் கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த நபரிடம் விசாரித்த போது அவர் உக்கடத்தை சேர்ந்த லியாகத் அலிகான் மகன் அபுதாஹிர் (வயது 45) என்பதும், ஆட்டோவில் 250 கிலோ எடை கொண்ட கஞ்சா சாக்லேட்டுகள், 700 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா சாக்லெட், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story