கஞ்சா சாக்லேட் விற்றவர் கைது

கஞ்சா சாக்லேட் விற்றவரை கைது செய்தனர்.
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் தலை மையில் போலீசார் கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த நபரிடம் விசாரித்த போது அவர் உக்கடத்தை சேர்ந்த லியாகத் அலிகான் மகன் அபுதாஹிர் (வயது 45) என்பதும், ஆட்டோவில் 250 கிலோ எடை கொண்ட கஞ்சா சாக்லேட்டுகள், 700 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா சாக்லெட், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





