கடத்தூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை; விவசாயி கைது


கடத்தூர் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை; விவசாயி கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 12:30 AM IST (Updated: 19 Jun 2023 6:25 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள அஸ்த்தகிரியூர் பகுதியை சேர்ந்த திருமணமான 23 வயது இளம்பெண் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சென்றாயன் (வயது 37) என்பவர் அங்கு சென்று இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கூச்சலிட்டவாறு அந்த பெண் அங்கிருந்து வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பெண்ணும், தாயாரும் சென்றாயன் வீட்டிற்கு சென்று கேட்டபோது அங்கிருந்த வாத்தியார் என்ற சென்னப்பன் என்பவர் பெண்ணின் தாயாரை கட்டையால் தாக்கினாராம்.

இதுகுறித்து இளம்பெண் கடத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து சென்றாயனை கைது செய்தனர். தலைமறைவான வாத்தியார் என்கிற சென்னப்பனை தேடி வருகிறார்.

1 More update

Next Story