ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சுரண்டை துவரங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் மொபட்டில் 3 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் விக்கிரமசிங்கபுரம் தாலுகா வெள்ளக்கால் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 105 கிலோ அரிசி, மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





