மணல் கடத்திய டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.


மணல் கடத்திய டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
x

மாரண்டஅள்ளி அருகே மணல் கடத்திய டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னாற்று படுகையில் இருந்து மணல் அள்ளி கடத்துவதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சக்கிலி நத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதேபகுதியை சேர்ந்த மணி (வயது24) என்பதும், சின்னாறு படுக்கையில் மணல் அள்ளி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story