ஜாமீனில் பெற்று தலைமறைவானவர் கைது


ஜாமீனில் பெற்று தலைமறைவானவர் கைது
x
தினத்தந்தி 20 July 2023 2:45 AM IST (Updated: 20 July 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஜாமீனில் பெற்று தலைமறைவானவர் கைது

நீலகிரி

கூடலூர்

கூடலூர் சளிவயல் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த ஆண்டு திருட்டு நடைபெற்றது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் நாடுகாணி பொன்னுரை சேர்ந்த வெள்ளையன்(வயது 52) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற வெள்ளையன், அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சசின்குமார் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Related Tags :
Next Story