திருமண ஆசை காட்டி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர் கைது


திருமண ஆசை காட்டி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர் கைது
x

பாளையங்கோட்டை அருகே திருமண ஆசை காட்டி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டி, இந்திரா காலனியை சேர்ந்த மாசாணம் என்பவரின் மகன் நாகராஜன் (வயது 38). இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் இதை பயன்படுத்தி அந்த பெண்ணிடம் தவறாகவும் நடந்து ள்ளார்.

இதை அறிந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர் நாகராஜனிடம் கேட்டனர். அப்போது நாகராஜன், அந்த பெண்ணின் பெற்றோரை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நாகராஜனை நேற்று கைது செய்தார்.


Related Tags :
Next Story