லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

சங்கரன்கோவில் அருகே லோடு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை மறித்து சோதனை செய்த போது, அதில் சுமார் 2 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வேனை ஓட்டி வந்த சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த சுடலை (வயது 54) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லோடு வேன், அரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய கணேசன், ரேஷன் கடை ஊழியர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





