கல்லூரி மாணவர் போக்சோவில் கைது


கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
x

பள்ளி மாணவியை கடத்திய கல்லூரி மாணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா மஞ்சநாயக்கன்அள்ளி அருகில் உள்ள அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி என்பவர் மகன் மனோஜ்குமார் (வயது 22). இவர் நாமக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து கல்லூரி சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் திருமண ஆசைவார்த்தை கூறி மனோஜ்குமார், மாணவியை கடத்தியதாக அவரது பெற்றோர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ்குமாரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று ஓசூர் பகுதியில் மனோஜ்குமார், மாணவியுடன் இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பள்ளி மாணவியை மீட்டனர். மேலும் போலீசார் மனோஜ்குமார் மீது போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story