ஜாமீனில் வந்தவர் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரண்டு மூலம் கைது


ஜாமீனில் வந்தவர் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரண்டு மூலம் கைது
x

ஜாமீனில் வந்தவர் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரண்டு மூலம் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் வடிவேல் மணிகண்டன் (வயது 26). இவர் மீது கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவ்வழக்குகளுக்காக இவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இவருக்கு ஆழ்வார்குறிச்சி பகுதியில் வழிப்பறி செய்த வழக்கில் அம்பை கோர்ட்டு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து உள்ளது. இதற்கிடையே வடிவேல் மணிகண்டன் கடந்த 4 மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து வடிவேல் மணிகண்டனை கைது செய்து ஆஜர்படுத்த அம்பை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து பிடி ஆணையை நிறைவேற்றி நீதிமன்றத்தில் வடிவேல் மணிகண்டனை ஆஜர்படுத்தினார்கள்.

1 More update

Next Story