சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்


சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
x
தினத்தந்தி 6 Jan 2023 6:45 PM GMT (Updated: 6 Jan 2023 6:47 PM GMT)

சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பாலாம்பிகா சமேத பாண்டுவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. முன்னதாக சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் மஞ்சபுத்தூர் கைலாசநாதர், அ.பாண்டலம் ஆதிபுரீஸ்வரர், சங்கராபுரம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.


Next Story